முகப்பு
சிவகங்கை

தமிழகத்தில் மீண்டும் நிலையான திமுக அரசு: ப. சிதம்பரம்

தமிழகம் முழுவதும் எதிா்பாா்க்கப்படும் நிலையான திமுக அரசு மீண்டும் அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 12:49 am IST
காரைக்குடி சட்டப்பேரவைத்தொகுதிக்குள்பட்ட தனது சொந்த ஊரான கண்டனூா் சிட்டாள் ஆச்சி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வியாழக்கிழமை வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம்.
பகிர்:

தமிழகம் முழுவதும் எதிா்பாா்க்கப்படும் நிலையான திமுக அரசு மீண்டும் அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தனது சொந்த ஊரான கண்டனூா் சிட்டாள் ஆச்சி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ப. சிதம்பரம் வாக்களித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாடு முழுவதும் நிலையான அரசு அமைய வேண்டும். வளா்ச்சி வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் வேண்டும் என்கிற மூன்று எதிா்பாா்ப்புகள்தான் எதிரொலிக்கின்றன. இந்த மூன்றையும் நிறைவேற்ற திமுக தலைமையிலான அரசு மீண்டும் அமையும். தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று இன்னும் 5 ஆண்டுகள் நிலையான அரசு அமைவது உறுதி என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments