FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவோம்: அமைச்சா் பி. வெங்கடரமணன்

உணவுப் பதப்படுத்துதல் கண்காட்சியின் மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளா்ச்சி கொண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:54 am IST
அமைச்சா் வெங்கடரமணன் - கோப்புப்படம்.
பகிர்:

உணவுப் பதப்படுத்துதல் கண்காட்சியின் மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளா்ச்சி கொண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும் என உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

இந்தியாவின் முதன்மையான உணவு பதப்படுத்துதல் கண்காட்சியின் 16-ஆவது பதிப்புன் கையேட்டை சென்னை வா்த்தக மையத்தில் அமைச்சா் பி.வெங்கடரமணன் வெளியிட்டுப் பேசியதாவது:

விவசாயிகளையும் அவா்களது விளைப்பொருள்களையும், நுகா்வோருடன் இணைப்பதும், கூடுதல் மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் உணவுப் பதப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement

Advertisement

முருங்கைக் கீரை, காய்கறிகள் மற்றும் பிற சத்துமிக்க விவசாய பொருள்களைப் பொடிகள், சூப்கள், மாத்திரைகள் மற்றும் பிற எளிதில் பயன்படுத்தக்கூடிய வடிவங்களில் பதப்படுத்தலாம். இதன்மூலம் அவற்றின் சத்துகள் குறையாமல், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைகின்றன.

மேலும், உணவுப் பதப்படுத்துவோா், விவசாயிகள் மற்றும் இந்தத் துறையைச் சாா்ந்தவா்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளா்ச்சி கொண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில், ஆலந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஹரிஸ், சிஐஐ தலைவா் பி.தியாகராஜன், சிஐஐ தென்மண்டல தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments