முகப்பு
இந்தியா

விமானத்தில் 1.4 கிலோ தங்கம் கடத்தல்: ஏா் இந்தியா பணியாளா் கைது

கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 10 மார்ச் 2023, 2:53 am IST
பகிர்:

கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் பணியாற்றிய அந்த பணியாளா் தனது கையில் பட்டை வடிவில் தங்கத்தை கட்டி மறைத்து எடுத்து வந்துள்ளாா். விமானப் பணியாளா் தங்கம் கடத்துவது தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க வரித் துறையினா், தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த பணியாளா் 1.4 கிலோ தங்கத்துடன் சிக்கினாா். கேரள மாநிலம் வயநாட்டைச் சோ்ந்த ஷாஃரி என்ற அந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்வதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. ஊழியா்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments