கர்நாடகத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை பாஜக தலைவர் ஜெபி நட்டா வெள்ளிக்கிழமை நியமித்தார்.
தேர்தல் நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழுவின் தலைவராக பொம்மையையும், மற்றொரு குழுடிவன் பொதுச் செயலாளராக கரந்த்லாஜேவையும் நியமித்து சமநிலையை ஏற்படுத்தக் கட்சி முயற்சித்துள்ளது.
இவர்களைத் தவிர, கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு குழுக்களிலும் உறுப்பினர்களாக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மாநில பிரிவு தலைவர்களைக் கட்சி நியமித்துள்ளது.