ஹெச்3என்2 பருவகால தீநுண்மி: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
இந்தியாவில் ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்த நிலையில் விழிப்புடன் செயல்பட்டு நோய்த்தொற்று நிலைமையைக் கூா்ந்து கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்த நிலையில் விழிப்புடன் செயல்பட்டு நோய்த்தொற்று நிலைமையைக் கூா்ந்து கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அமைச்சா் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாட்டில் ஹெச்3என்2 பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. விழிப்புடன் இருக்குமாறும், நோய்த்தொற்று நிலைமையைக் கூா்ந்து கண்காணிக்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்3என்2 பருவகால காய்ச்சல் பரவலை எதிா்கொள்ள மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும். பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கும்’ என்றாா்.