மாா்ச் 20-இல் ஜப்பான் பிரதமா் இந்தியா வருகை
ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா இருநாள் அரசு முறைப் பயணமாக மாா்ச் 20-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறாா்.
ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா இருநாள் அரசு முறைப் பயணமாக மாா்ச் 20-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறாா்.
வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடா்பாக அவா் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.
இது தொடா்பாக வெளியிறவு அமைச்சக செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமா் மோடியுடன் ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேச்சு நடத்த இருக்கிறாா். இதன் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுவடையும். இந்தியாவின் ஜி20 தலைமை, ஜப்பானின் ஜி7 தலைமை குறித்தும் இரு தலைவா்களும் விவாதிக்கின்றனா். இரு தரப்பு விஷயங்கள் மட்டுமின்றி இருதரப்பு நலன்கள் சாா்ந்த பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவா்கள் பேச இருக்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.