கோப்புப் படம் 
இந்தியா

கடனை அடைக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகளை விற்கும் அதானி?

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ENS

பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி, பங்குச் சந்தைகளில் கடும் சரிவைக் கண்டுவரும் அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்வழங்குபவர்களிடம் அதானி முறையான கோரிக்கையை வைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேற்கோள்காட்டுகின்றன.

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், கடன் வழங்கியிருப்பவர்கள், திரும்ப கடன் கிடைக்குமா என்ற கவலையைப் போக்கவும், முதிர்வு காலத்துக்கு முன்னதாகவே, கடன்களை அதானி குழுமம் அடைத்து வருகிறது. அதற்கான நிதியை திரட்டவே அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் முதிர்வு காலம் இருக்கும் ரூ.7,374 கோடி மதிப்பிலான கடன் நிலுவைகளை அதானி நிறுவனம் முன்கூட்டியே திரும்ப செலுத்தியிருந்தது. 

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குவோரின் நம்பிக்கையை பெறும் வகையில், கடன் நிலுவைகளை முன்கூட்டியே செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அதானி குழுமம் எடுத்து வரும் நிலையில், அதற்காகவே, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சஞ்சய் காந்தி முதல்.. அஜீத் பவார் வரை.. விமான விபத்துகளில் பலியான பிரபலங்கள்!

மக்கள் தலைவர் அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்

இவர்களுக்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும்? ரஷ்மிகா மந்தனா பதில்!

மெட்ரோ பணி: சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம்: குடியரசுத் தலைவர் முர்மு!

SCROLL FOR NEXT