கோப்புப் படம் 
இந்தியா

கடனை அடைக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகளை விற்கும் அதானி?

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ENS

பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி, பங்குச் சந்தைகளில் கடும் சரிவைக் கண்டுவரும் அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்வழங்குபவர்களிடம் அதானி முறையான கோரிக்கையை வைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேற்கோள்காட்டுகின்றன.

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், கடன் வழங்கியிருப்பவர்கள், திரும்ப கடன் கிடைக்குமா என்ற கவலையைப் போக்கவும், முதிர்வு காலத்துக்கு முன்னதாகவே, கடன்களை அதானி குழுமம் அடைத்து வருகிறது. அதற்கான நிதியை திரட்டவே அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் முதிர்வு காலம் இருக்கும் ரூ.7,374 கோடி மதிப்பிலான கடன் நிலுவைகளை அதானி நிறுவனம் முன்கூட்டியே திரும்ப செலுத்தியிருந்தது. 

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குவோரின் நம்பிக்கையை பெறும் வகையில், கடன் நிலுவைகளை முன்கூட்டியே செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அதானி குழுமம் எடுத்து வரும் நிலையில், அதற்காகவே, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT