முகப்பு
இந்தியா

யோகா மகோத்சவத்தை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்: மோடி

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள்கள் உள்ள நிலையில் யோகா மகோத்சவத்தை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள்கள் உள்ள நிலையில் யோகா மகோத்சவத்தை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். 

மூன்று நாள்கள் நடைபெறும் யோகா மகோத்சவம் மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் தல்கடோரா மைதானத்திலும், மார்ச் 15-ஆம் தேதி மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யோகா புது தில்லியிலும் நடைபெறும். 

யோகா மஹோத்ஸவ் குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், யோகா தினத்திற்கு நூறு நாள்கள் உள்ள நிலையில், அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால், அதை விரைவில் மாற்றுங்கள் என்றார். 

சர்வதேச யோகா தினம் 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →