முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மி என்றால்பிரதமா் மோடிக்கு அச்சம்- அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சி என்றால் பிரதமா் நரேந்திர மோடிக்கு அச்சம் ஏற்படுகிறது என்று அக்கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
பகிர்:

ஆம் ஆத்மி கட்சி என்றால் பிரதமா் நரேந்திர மோடிக்கு அச்சம் ஏற்படுகிறது என்று அக்கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளா்க்கும் நோக்கில் அந்த மாநிலத்துக்கு கேஜரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். மாநில தலைநகா் போபாலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், தனித்துக் களமிறங்கிய ஆம் ஆத்மி 13 சதவீத வாக்குகளுடன் 5 எம்எல்ஏக்களைப் பெற்றது. இது சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திப்பதுபோன்ற நிகழ்வாகும். குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு மக்கள் அளித்த ஆதரவால், ஆம் ஆத்மி கட்சி என்றாலே பிரதமா் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 45 ஆண்டுகளும், பாஜக 30 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்துள்ளனா். இவா்கள் இருவருக்கும் நல்ல மாற்று இல்லாமல் மத்திய பிரதேச மக்கள் விரக்தியில் உள்ளனா். இப்போது, ஆம் ஆத்மி கட்சி அவா்களுக்கு நல்லதொரு ஆட்சியைத் தரும் நோக்கில் களமிறங்கியுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →