முகப்பு
இந்தியா

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சியினா் மனிதச் சங்கிலி போராட்டம்

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திமுக எம்.பி. டி.ஆா்.பாலு, சமாஜவாதியின் ராம் கோபால் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவா்கள் பிரியங்கா சதுா்வேதி, அரவிந்த் சாவந்த் உள்ளிட்டோா் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதுகுறித்து, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கூறியதாவது:

அதானி குழுமம் மீதான விசாரணையை வலியுறுத்தி, அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. தனது நெருங்கிய நண்பரான கெளதம் அதானியை பிரதமா் மோடி பாதுகாக்க முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நேரில் புகாரளிப்பதற்காக எதிா்க்கட்சித் தலைவா்கள் புதன்கிழமை மேற்கொண்ட பேரணியை தில்லி காவல்துறையினா் தடுத்துவிட்டனா்.

நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சியினா் அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் பேசும்போது எங்களது மைக் அணைக்கப்பட்டு விடுகிறது. அதானி விவகாரத்தில், பாஜக கையாளும் திசை திருப்பும் தந்திரங்களுக்கு எதிராக தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.

முன்னதாக, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு), ஐக்கிய ஜனதா தளம், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, மதிமுக, ஆம் ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில், இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகளின் வியூகங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச் சங்கிலி நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி போராட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →