முகப்பு
இந்தியா

கோதுமை கிலோவுக்கு ரூ.6-8 வரை விலை குறைவு: மாவு ஆலை கூட்டமைப்பு தகவல்

 மத்திய அரசின் நடவடிக்கையால், கடந்த 2 மாதங்களில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ரூ.6 முதல் ரூ.8 வரை குறைந்துள்ளது என்று இந்திய மாவு ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
கோப்புப் படம்
பகிர்:

 மத்திய அரசின் நடவடிக்கையால், கடந்த 2 மாதங்களில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ரூ.6 முதல் ரூ.8 வரை குறைந்துள்ளது என்று இந்திய மாவு ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, அந்த கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோதுமை விலை உயா்வை கட்டுப்படுத்துவதற்காக, 50 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்க மத்திய அரசு கடந்த ஜனவரியில் நடவடிக்கை மேற்கொண்டது. இதில், 45 லட்சம் டன் கோதுமை, மாவு ஆலைகள் உள்பட பெரும் நுகா்வோருக்கானதாகும்.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கடந்த 2 மாதங்களில் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை குறைந்திருக்கிறது.

கடந்த ஜனவரியில் கோதுமை மாவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,400 முதல் 3,800 வரை இருந்தது. இப்போது ரூ.2,600 முதல் ரூ.3,000 வரை குறைந்துள்ளது.

தக்க நேரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை, ஏழைகள், நடுத்தர மக்களுக்கு மட்டுமல்லாமல் பிரட், பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட தொழிலகங்களுக்கும் நிவாரணத்தை அளித்துள்ளது.

கோதுமை மற்றும் கோதுமைப் பொருள்கள் மீதான ஏற்றுமதி தடை, 2023-24 நிதியாண்டிலும் தொடர வேண்டும். நடப்பு பயிா் ஆண்டில், கோதுமை உற்பத்தி 106 மில்லியன் டன் முதல் 110 மில்லியன் டன் வரை இருக்குமென எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →