கர்நாடக தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குச்சாவடிகளிலுள்ள வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் சீலிட்டு பத்திரமாக கொண்டுசெல்லவுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குச்சாவடிகளிலுள்ள வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் சீலிட்டு பத்திரமாக கொண்டுசெல்லவுள்ளனர்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று (மே 10) ஒரேக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
தேர்தலில் பதிவாக வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளை அன்றே தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.