முகப்பு
இந்தியா

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: நடத்துனர் பலி, 35 பேர் காயம்!

அகமதாபாத்தில் இருந்து கான்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியாகினர், 35 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
கோப்புப்படம்
பகிர்:

அகமதாபாத்தில் இருந்து கான்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியாகினர், 35 பேர் காயமடைந்தனர். 

வியாழக்கிழமை காலை கான்பூர்-ஜான்சி தேசிய நெடுஞ்சாலையில்  45 பயணிகளுடன் கான்பூருக்குச் சென்றுக்கொண்டிருத் பேருந்து கோட்வாலி அட்டா பகுதிக்கு உள்பட்ட சாய் மந்திர் அருகே பேருந்து கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்து நடத்துனர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பாப்பன்(45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மேலும், 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கல்பியில் உள்ள சமூக சுகாதார மையத்திலும், ஒருசிலர் மாவட்ட மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. 

விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →