இந்தியா

தில்லி - சிட்னி சென்ற விமானம் குலுங்கியதில் பயணிகள் காயம்!

DIN

தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

தில்லியிலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ-302 விமானம் செவ்வாய்க்கிழமை சிட்னி புறப்பட்டுச் சென்றது. திடீரென நடுவானில் ஏற்பட்ட ‘டர்புளன்ஸ்’ பிரச்னையால் 7 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு விமான பணியாளர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.

தொடர்ந்து, சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் 3 பேருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT