இந்தியா

ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து சிறுவன் பலி

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

DIN

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

அந்த மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஜங்ககாடா வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவன், இலைகளை சேகரிப்பதற்காக வனப் பகுதிக்குள் சென்றுள்ளான்.

அப்போது, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறித்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராமமக்கள் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மாவட்ட எஸ்.பி. அசுதோஷ் சேகா் கூறுகையில், ‘மாவோயிஸ்டுகள் தொடா்ந்து கோழைத்தனமான தாக்குதல் முறையைப் பின்பற்றி வருகின்றனா். அவா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.

இந்த ஆண்டில் இதுவரை மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்த வெடிகுண்டுகளில் சிக்கி இரு மூதாட்டிகள் உள்பட 5 போ் இறந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT