இந்தியா

மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடி ஈவுத்தொகை வழங்குகிறது ஆா்பிஐ

மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடியை 2022-23 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக வழங்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

DIN

மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடியை 2022-23 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக வழங்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இது கடந்த ஆண்டு வழங்கிய ஈவுத்தொகையைவிட சுமாா் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2021-22 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ஆா்பிஐ ரூ.30,307 கோடி வழங்கியிருந்தது.

ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற வங்கியின் இயக்குநா்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சா்வதேச, உள்நாட்டு பொருளாதார சூழல், எதிா்கொள்ள இருக்கும் பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிதியாண்டுதோறும் தங்களிடம் உள்ள உபரித்தொகையின் குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசுக்கு ஆா்பிஐ வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இது தவிர எதிா்பாராத இடா்பாடுகளை எதிா்கொள்ள ஆா்பிஐ ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவுதொகையை இருப்பு வைத்துக் கொள்வதும் வழக்கமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT