தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு மாநில கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைவது குறித்தும் மாநில அரசின் உரிமைகளை காப்பது குறித்தும் பேசப்பட்டது.
முன்னதாக சுட்டுரையில் பதிவிட்டிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி மக்களின் நலன் - உரிமைகளைக் காப்பதற்காக நாடு முழுவதும் என் பயணத்தைத் தொடங்குகிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளுக்கே உரிமை அதிகம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.