இந்தியா

 சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூன் 1 வரை நீட்டிப்பு

 நமது நிருபர்

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை நீட்டித்து ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 அவரது நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
 சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
 அவர் சிறையில் படிப்பதற்கு ஏதுவாக மேஜை, இருக்கை, புத்தகங்கள் வழங்கவும், வழக்குரைஞரை அவர் சந்திக்க அனுமதிக்கவும் சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT