இந்தியா

ஜூன் முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் குறைப்பு

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், மானியம் வழங்குவதற்கான ஃபேம் திட்டம் கடந்த 2019 ஏப்ரல் 1-இல் தொடங்கப்பட்டது. முதலில் 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை என இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் மின்கலனின் திறனைப் பொருத்து கிலோ வாட் மின்திறனுக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்களுக்கான மானிய விலையின் உச்சவரம்பு உற்பத்தியாளா் விற்கும் விலையில் 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT