இந்தியா

முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள்: கார்கே, ராகுல் காந்தி மரியாதை

DIN

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஜவஹர்லால் நேரு ஆவார். 1947 இல் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமராகவும் ஆனார்.

நேரு 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்தார். பிறகு, லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT