முகப்பு
இந்தியா

மைசூரு அருகே கார்-வேன் மோதல்: 10 பேர் பலி; நிவாரணம் அறிவிப்பு

கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே திருமாகுடலு - நரசிபுரா பகுதியில் ஒரு இன்னோவோ காரும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →