முகப்பு
இந்தியா

நேபாளத்தில் நிலநடுக்கம்: 72 பேர் பலி

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கம், இந்தியாவிலும் பல இடங்களில் உணரப்பட்டது. இதேபோன்று சீன எல்லைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ.3) இரவு 11.32 மணியளவில் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 7 மணி நிலவரப்படி 72ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →