கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.: மின்விசிறி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி

உத்திரப் பிரதேசத்தில் மின்விசிறி அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

உத்திரப் பிரதேசத்தில் மின்விசிறி அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பாரசக்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சரோஜ் வீட்டில் மின்விசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் நான்கு குழந்தைகள் பலியாகினர். 

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான குழந்தைகள் மயங்க், ஹிமான்ஷி, ஹிமாங்க் மற்றும் மான்சி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என வட்ட அலுவலர் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "ஃபராட்டா" மின்விசிறிக்கு அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT