கோப்புப் படம் 
இந்தியா

நடப்பாண்டில் 13 வீரர்கள் பலி! 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீருக்கு உட்பட்ட 3 மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 45 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில், பதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் உள்பட 22 பயங்கரவாதிகள் அடங்குவர். 

DIN

ஜம்மு - காஷ்மீருக்கு உட்பட்ட 3 மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 45 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில், பதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் உள்பட 22 பயங்கரவாதிகள் அடங்குவர். 

ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தின் பஜிமால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில், ராணுவத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். 

இதேபோன்று ரஜெளரியின் பூஞ்ச் எல்லைக்குட்பட்ட மெந்தஹார் வனப்பகுதியில் ஏப்ரல் 20 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 கமாண்டோக்கள் உள்பட 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

அரசுத் தகவல்களின்படி, ரஜெளரி, பூஞ்ச், ரியாசி மாவட்டங்களில் கடந்த ஜனவரி முதல் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ தாக்குதலில், 45 பேர் உயிரிழந்தனர். 

இதில், ரஜெளரியில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள், 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ரியாசியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இதில், அதிகப்படியான தாக்குதல்கள் எல்லைப் பகுதியைத் தாண்டி நுழைந்ததற்காக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT