இந்தியா

மலையாள எழுத்தாளர் பி.வல்சலா காலமானார்

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா மாரடைப்பால் காலமானார்.

DIN

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா(85 வயது) மாரடைப்பால் நேற்று (நவம்.21) காலமானார்.

கேரளாவின் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள எழுத்தாளர் பி.வல்சலா திடீர் மாரடைப்பால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உயிரிழந்தார்.

வயநாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்து 1972-ல் வெளியான ‘நெல்லு’ நாவலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

விலாபம், கானல், பாளையம் உள்ளிட்ட பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

கேரள சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் விருது, சி.வி.குன்னிராமன் நினைவு சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 

பி.வல்சலா சாகித்ய அகாதெமி நிறுவனத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இவரது கணவர் அப்புக்குட்டி, மகள் மினி மற்றும் மகன் அருண் ஆகியோருடன் கேரளாவில் வாழ்ந்துவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

முற்போக்கான சீர்திருத்தம்! புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

குரோவ் Q2 லாபம் 12% உயர்வு; வருவாய் சரிவு!

அறிகுறியே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகம்! செய்ய வேண்டியது என்ன? மருத்துவர் அறிவுரைகள்! | kidney

SCROLL FOR NEXT