இந்தியா

மலையாள எழுத்தாளர் பி.வல்சலா காலமானார்

DIN

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா(85 வயது) மாரடைப்பால் நேற்று (நவம்.21) காலமானார்.

கேரளாவின் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள எழுத்தாளர் பி.வல்சலா திடீர் மாரடைப்பால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உயிரிழந்தார்.

வயநாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்து 1972-ல் வெளியான ‘நெல்லு’ நாவலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

விலாபம், கானல், பாளையம் உள்ளிட்ட பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

கேரள சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் விருது, சி.வி.குன்னிராமன் நினைவு சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 

பி.வல்சலா சாகித்ய அகாதெமி நிறுவனத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இவரது கணவர் அப்புக்குட்டி, மகள் மினி மற்றும் மகன் அருண் ஆகியோருடன் கேரளாவில் வாழ்ந்துவந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT