FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலை

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

Updated On : 24 நவம்பர் 2023, 12:28 am IST
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பாஜி மால் பகுதியில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்.
பகிர்:

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளுடான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது.

ரஜௌரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். 2 ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.

இதையடுத்து பஜிமால் பகுதியில் வியாழக்கிழமை காலை ராணுவத்தினா் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த குவாரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இந்திய ராணுவத்தினா் கூறியதாவது: சுட்டுக்கொல்லப்பட்ட குவாரி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் பயிற்சி பெற்றுள்ளாா். அவா் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவா்களுள் ஒருவா். ரஜௌரி, பூஞ்ச் மாவட்ட எல்லைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழும் பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு தொடா்புண்டு.

மேலும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்களை கையாள்வதில் வல்லுநரான அவா், கடந்த ஜனவரி மாதம் டங்கிரி பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளாா். சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டின்போது ராணுவ வீரா் ஒருவரும் வீரமரணம் அடைந்தாா்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments