இந்தியா

மகாராஷ்டிரம் : கோயில் கதவை உடைத்துத் திருட்டு!

DIN

மகாராஷ்டிரம், நவி மும்பையில் உள்ள கான்சொலி பகுதியில் கோயில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். உண்டியலிலிருந்து 10,000 ரூபாய் பணத்தைத் திருடிய அந்த கண்டுபிடிக்கப்படாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். 

சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை இரவு இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு 11  மணி முதல் விடியற்காலை 4.30 மணிக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

திருடர்கள் கோயில் கதவை உடைத்துக்கொண்டு வந்து உண்டியலிலிருந்த 10,000 ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT