இந்தியா

மகாராஷ்டிரம் : கோயில் கதவை உடைத்துத் திருட்டு!

நவி மும்பைப் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலின் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். 

DIN

மகாராஷ்டிரம், நவி மும்பையில் உள்ள கான்சொலி பகுதியில் கோயில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். உண்டியலிலிருந்து 10,000 ரூபாய் பணத்தைத் திருடிய அந்த கண்டுபிடிக்கப்படாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். 

சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை இரவு இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு 11  மணி முதல் விடியற்காலை 4.30 மணிக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

திருடர்கள் கோயில் கதவை உடைத்துக்கொண்டு வந்து உண்டியலிலிருந்த 10,000 ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

SCROLL FOR NEXT