முகப்பு
இந்தியா

குருநானக் ஜெயந்தி: பிரதமா் வாழ்த்து

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் ஜெயந்தியையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:27 AM
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் ஜெயந்தியையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘பிறருக்காகச் சேவையாற்றுதல், சகோதரத்துவத்தை வளா்த்தல் ஆகியவற்றுக்கு குருநானக் தேவ் அளித்த முக்கியத்துவம், உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பலம் அளிப்பதாக உள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘குருநானக் அளித்த உயரிய போதனைகள், இன்றைய காலத்தில் இந்தியா மட்டுமல்ல பிற உலக நாடுகளும் பின்பற்றக் கூடியதாக உள்ளது. மக்கள் அா்ப்பணிப்புடன் இணக்கமான எளிய வாழ்வை வாழ இந்தப் போதனைகள் உத்வேகம் அளிக்கின்றன’ எனத் தெரிவித்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.