முகப்பு
இந்தியா

தேர்தல் முடிந்த 3-வது நாளில் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலை சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

1995-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்த குப்தா, ராஜஸ்தான் மாநிலத்தில்  தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவ.25  அன்று நடந்து முடிந்துள்ளது. டிச. 3 வாக்குப்பதிவு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →