மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள அரசு நடத்தும் உடற்கல்வி நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட சுமார் 100 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவாலியரில் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் பரிமாறப்பட்ட பன்னீர் சப்ஜி உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுமார் 100 மாணவர்கள் அரசு நடத்தும் ஜெயரோக்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உணவு விஷமாகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்
இந்த நிறுவனத்தின் பதிவாளர் அமித் யாதவ் கூறுகையில்,
சில மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மாணவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.