சுதாகர் சிங் 
இந்தியா

அதிகாரிகள் முகத்தில் துப்புங்கள்! விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுரை

வேலை செய்யாத அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்புங்கள் என்று விவசாயிகளுக்கு பிகார் முன்னாள் அமைச்சர் சுதாகர் சிங் அறிவுறுத்தியுள்ளார். 

இணையதளச் செய்திப் பிரிவு

வேலை செய்யாத அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்புங்கள் என்று விவசாயிகளுக்கு பிகார் முன்னாள் அமைச்சர் சுதாகர் சிங் அறிவுறுத்தியுள்ளார். 

பிகார் விவசாயத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சுதாகர் சிங் ஆளும் அரசு கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 

இவர் கைமூர் மாவட்டத்தில் கிசான் மகாபஞ்சயாத்தில் பேசும்போது, அதிகாரி ஒருவர் தனது வேலையைச் செய்யாவிட்டால் அவரது முகத்தில் எச்சில் துப்ப வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் பேசியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பணிந்தால், மாநில அரசால் ஏன் பணிய முடியாது என்றும் கூறிய அவர், அதிகாரிகளுக்கு பூமாலைகள் அல்லாமல் காலணிகளை மாலையாக அணிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது பேச்சு பிகார் மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பிகாரில் கடந்த 18 ஆண்டுகளாக ஒருவர் மட்டுமே ஆட்சியில் இருப்பதாக முதல்வர் நிதிஷ் குமாரையும் சாடியுள்ளார். 

ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு எம்எல்ஏ, மாநில அரசை விமரிசித்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT