இந்தியா

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். 

DIN

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். 

உயர் நீதிமன்றத்தின் நான்கு புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு விஜயவாடாவில் ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தும்மலப்பள்ளி கலேஷேத்திரம் அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

ஹரிநாத் நுனேபல்லி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜெகதம் மற்றும் நியாபதி விஜய் ஆகியோர் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதிகள் ஆவார். 

இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக, பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதல்வர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

தவெக மாநாடு! 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்தது... கார் சேதம்!

மதுரை தவெக மாநாட்டுக்காக வீதிகளில் பிரசார வாகன உலா!

கண்கள் கவரும்... ஷெஹனாஸ்!

SCROLL FOR NEXT