தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 16 பேர் பத்திரமாக மீட்பு
தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மத்திய தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்துக்கு 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 6 குழந்தைகள் உட்பட 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும மீட்புப்பணியின்போது குடியிருப்புக்குள் இருந்த எரிவாயு உருளை வெடித்ததால் மீட்புப் பணி சவாலானது என்றார். தீ விபத்துக்கான காரணத்தை அறிய நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.