இந்தியா

ஜாமியா மசூதியில் 3-வது வாரமாக தொழுகை ரத்து!

ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதி தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், பாதுகாப்பு காரணமாக ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதி தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஹுரியத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் கூறுகையில், 

நௌஹட்டா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதி தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதைத் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது. 

போரினால் ஒருபோதும் அமைதி கிடைக்காது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். மேலும் அவநம்பிக்கை, பாதுகாப்பின்மையை உருவாக்குவதாகவும் அவர் கூறினார். 

ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT