இந்தியா

கேரள குண்டுவெடிப்பு: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளம் களமசேரி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் காவல் துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அதன் அண்மை மாநிலமான தமிழக எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் மூலம் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் விடுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு சம்பவ இடத்தில் இருந்து அதற்கு சற்று முன்னதாக நீல நிற சொகுசு கார் சந்தேகப்படும்படி கிளம்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று நாள்களாக நடந்து வந்த களமசேரி மத கூட்டரங்கில் இன்று, அடுத்தடுத்து குண்டுவெடித்தது. 2000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியானதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT