இந்தியா

கேரள குண்டுவெடிப்பு: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

DIN

எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அதன் அண்மை மாநிலமான தமிழக எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் மூலம் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் விடுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு சம்பவ இடத்தில் இருந்து அதற்கு சற்று முன்னதாக நீல நிற சொகுசு கார் சந்தேகப்படும்படி கிளம்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று நாள்களாக நடந்து வந்த களமசேரி மத கூட்டரங்கில் இன்று, அடுத்தடுத்து குண்டுவெடித்தது. 2000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியானதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT