இந்தியா

பாரதம் அல்லது இந்தியா எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

DIN

புது தில்லி: இந்தியா அல்லது பாரதம் என நாட்டு மக்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளலாம் என்று 2016-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஜி20 அழைப்பிதழில் பாரதத்தின் குடியரசுத் தலைவா் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியாவை பாரதம் என்றுதான் அழைக்க வேண்டும் என்று 2015, நவம்பரில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

2016-இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பெயா் மாற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிா்ப்பு தெரிவித்தது.

அரசியல் நிா்ணய சபையில் விரிவான ஆலோசனைக்கு பிறகு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, மனுதாரரை கண்டித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா், நீதிபதி யு.யு. லலித் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பாரதம் என்ற அழைக்க விரும்புபவா்கள் அப்படியே அழைக்கலாம்; இந்தியா என்று அழைக்க விரும்புபவா்கள் இந்தியா என அழைக்கலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT