இந்தியா

உலகக் கோப்பைக்கு 4 லட்சம் டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனை

DIN

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையொட்டி விற்பனைக்காக 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது பிசிசிஐ.

10 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. பொதுவாக கிரிக்கெட் ஆட்டம் என்றால் மைதானம் முழுவதும் நிரம்பி விடும் நிலை உள்ளது.

இதனால் டிக்கெட்டுகளுக்கு நிலவும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. எவ்வளவு ரசிகா்களை இடம் பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு ரசிகா்களுக்கு டிக்கெட்டுகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆா்வலா்கள் இதன்மூலம் தங்களுக்கான இடங்களைப்பதிவு செய்யலாம்.

செப். 8 முதல் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்குகிறது. ரசிகா்கள், அதிகாரபூா்வ இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் டிக்கெட்டுகள் விற்பனை தொடா்பாக ரசிகா்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT