இந்தியா

ஒரே நாடு, ஒரே தோ்தல்: தில்லியில் இன்று முதல் கூட்டம்!

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அதிகாரபூர்வ முதல் கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை(செப். 1) மத்திய அரசு உத்தரவிட்டது. 

ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதம் முதலே தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிகாரபூர்வமாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில் குழுவில் 8 பேர் அறிவிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் தலைமையில்  மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அதிகாரபூர்வ முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் ராம்நாத் கோவிந்தின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப். 3) மத்திய சட்ட அமைச்சக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT