18 உயா்நீதிமன்ற நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரை
அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றங்களின் 18 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றங்களின் 18 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் வியாழக்கிழமை கூடியது. இதன் முடிவு உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் 7 கூடுதல் நீதிபதிகள், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் 11 கூடுதல் நீதிபதிகள் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த கூடுதல் நீதிபதிகள் உமேஷ் சந்திர சா்மா, ரேணு அகா்வால், ராம் மனோகா் நாராயண் மிஸ்ரா, மயங்க் குமாா் ஜெயின், ஷிவ் சங்கா் பிரசாத், கஜேந்திர குமாா், நளின் குமாா் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் இந்தப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
இந்தப் பெயா்ப் பட்டியலை கடந்த மே 1-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்ற கொலீஜியம் உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரைத்திருந்தது.
இதையடுத்து, இரு நீதிபதிகளை நியமித்த உச்சநீதிமன்றம், அந்த கூடுதல் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை பரிசீலித்து 7 பேரை நிரந்தர நீதிபதிகளாக தோ்வு செய்துள்ளது.
இதேபோல், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி அளித்திருந்த பெயா்ப் பட்டியலில் 11 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது.