நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் தொடங்கியது. 

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் தொடங்கியது. 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியுள்ளது. 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்த அலுவல் விவரங்கள் முறையாக வெளியிடப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதில், விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, சீன எல்லை அத்துமீறல்கள், அதானி நிறுவன முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT