வடக்கு மற்றும் வடகிழக்கு தெலங்கானவின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
தெலங்கானாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்ததாவது: இன்றும், நாளையும் தெலங்கானாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா முழுவதும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.