தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அக். 17 முதல் இடமாற்றம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கியுள்ளது.
வருகின்ற அக்டோபர் 17 முதல் அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பணி நடைபெறவுள்ளது. இதனால், வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை ஜனவரி 1-ஆம் தேதி வரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும், காலியாக உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.