இந்தியா

9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர் விசா விண்ணப்பங்களைப் பரிசீலித்த அமெரிக்க தூதரகங்கள்!

DIN

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் கடந்த 9 மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் விசா விண்ணப்பங்களைக்  கையாண்டு சாதனை படைத்துள்ளது.

கடந்த 2019 முதல் 2022 ஆண்டிகளை ஒப்பிடும்போது, 2023ஆம் ஆண்டில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு வேலை, படிப்பு, சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு நுழைவு இசைவு பெற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்தாண்டு இன்னும் 3 மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில், 10 லட்சம் நுழைவு இசைவு என்ற இலக்கை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அடைந்துள்ளன.

இதில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் படிப்பை மேற்கொள்ள செல்லும் சுமார் 90,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் நுழைவு இசைவு வழங்கியுள்ளது.

இது, உலக அளவில் அமெரிக்காவுக்கு படிப்பதற்காக நுழைவு இசைவு பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் 4-ல் ஒரு பங்கு என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த அக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2022 காலகட்டத்தில் மட்டும் 4.11 லட்சம் மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் நுழைவு இசைவு கொடுக்கப்பட்டுள்ளது.

2010-க்கு பிறகு அமெரிக்காவுக்கு நுழைவு இசைவு பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்தாண்டு முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், பல்வேறு புதிய சாதனைகளை அமெரிக்க தூதரகம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

அன்னையரைப் போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT