முகப்பு
இந்தியா

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல்

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அவரது ஒப்புதல் பெற்றவுடன் இந்த மசோதா சட்டமாகும்.

மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேறியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →