பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 52 பேர் பலி, 50 பேர் காயம்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர்.
இந்தியாபாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 52 பேர் பலி, 50 பேர் காயம்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.
மஸ்துங் மாவட்டத்தில் முகம்மது நபியின் பிறந்தநாளான ஈத் மிலாடி நபி கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற மக்கள் ஒன்றாகக் கூடியிருந்தனர்.
அப்போது மதீனா மசூதிக்கு அருகே திடீரென இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
படிக்க: 12 ராசிக்கான வாரப்பலன்கள்!
குண்டுவெடிப்பு சம்பவம் குறிவைத்து நடத்தப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறையினர் அவசரநிலையை அறிவித்துள்ளனர். தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.