கோப்புப்படம் 
இந்தியா

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 52 பேர் பலி, 50 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். 

DIN


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். 

மஸ்துங் மாவட்டத்தில் முகம்மது நபியின் பிறந்தநாளான ஈத் மிலாடி நபி கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற மக்கள் ஒன்றாகக் கூடியிருந்தனர்.

அப்போது மதீனா மசூதிக்கு அருகே திடீரென இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

குண்டுவெடிப்பு சம்பவம் குறிவைத்து நடத்தப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறையினர் அவசரநிலையை அறிவித்துள்ளனர். தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT