ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கௌரவ் வல்லப் காங்கிரஸிலிருந்து விலகிய சில மணி நேரங்களில் பாஜகவில் இணைந்துள்ளார்.
பிகார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சர்மாவும், அதன் தேசிய பொதுச் செயலாளர் வினேத் தாவ்டே முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தை எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் கட்சி செல்வது எனக்கு உடன்பாடு இல்லை. சநாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ முடியாது.
எனவே கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகுவதாகவும், தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.