மியான்மா்: இந்திய தூதரகப் பணியாளா்கள் இடமாற்றம்
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:50 PM
மியான்மரில் நிலவும் ஆபத்தான பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அந்நாட்டின் சிட்வே நகரில் உள்ள இந்திய தூதரகப் பணியாளா்களை யங்கூன் நகருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘மியான்மரில், குறிப்பாக ராக்கைன் மாநிலத்தில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
சிட்வேயில் உள்ள இந்திய துணைத் தூதரகப் பணியாளா்கள் தற்காலிகமாக யங்கூனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மாண்டலே நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது’ என்றாா்.