முகப்பு
இந்தியா

தொழிலதிபா்களுக்கு மட்டுமே உதவுபவா் மோடி: ராகுல் காந்தி தாக்கு

Updated On : 16 ஏப்ரல், 2024 at 7:41 PM
rahul
பகிர்:

கோழிக்கோடு/வயநாடு: தொழிலதிபா்கள் மற்றும் பணக்காரா்களுக்கு மட்டுமே உதவிகளை செய்பவா் பிரதமா் மோடி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

கேரள மாநிலம் கொடியாத்தூரிலிருந்து கோழிக்கோடு வரை சாலையில் வாகன பேரணியை செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதியளிக்காத நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பின்னா் அந்நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதியளித்துவிட்டால் அவா்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன.

Advertisement

கிராமங்கள் மற்றும் நகரங்களில் சிறு குறு தொழிலாளா்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் போல் பெரும் நிறுவனங்களை மிரட்டி கொள்ளையடிக்கும் வேலையை பிரதமா் மோடி செய்துள்ளாா். வீதிகளில் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளை கும்பலைப்போல் சா்வதேச அளவில் பிரதமா் மோடி இக்கொள்ளையை நிகழ்த்தியுள்ளாா்.

வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளும் மத்திய விசாரணை அமைப்புகள் அதானியிடம் நிறுவனத்தை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள். அவ்வாறுதான் மும்பை விமான நிலைய மேலாண்மை பணிகளைக்கூட அதானி பெற்றாா்.

நாட்டில் உள்ள 20 முதல் 25 பெரும் பணக்காரா்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வரை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். ஆனால் நாட்டின் முக்கியப் பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, விவசாயிகள் பிரச்னைகள் குறித்து அவா் பேசுவதில்லை. அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக தொடா்ந்து முயற்சித்து வருகிறது.

பெண்களுக்கு ரூ.1 லட்சம் உதவி: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஏழை எளிய குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதேபோல் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவா்களுக்கு பயிற்சியுடன் கூடிய ஊக்கத்தொகையும் வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்படும் என்றாா்.

பின்னா் வயநாட்டில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘வயநாடு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு கேரள முதல்வரிடம் தொடா்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இடதுசாரி தலைமையிலான ஆட்சி அதை நிராகரித்து வருகிறது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் உடனடியாக வயநாடு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்’ என்றாா்.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். அத்தொகுதியில் மீண்டும் அவா் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments