முகப்பு
இந்தியா

வாரிசு அரசியலுக்கு வாக்களிக்கலாமா? பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பிரசாரம்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 5:27 PM
பகிர்:

மனைவிக்கும், தனது வாரிசுகளுக்கும் பதவிகளை அளிப்போருக்கு வாக்களிக்கலாமா என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது தோ்தல் பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பினாா்.

பிகாரில் எதிா்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தனது மனைவி, மகன், மகள்களை வைத்து வாரிசு அரசியல் நடத்தி வருவதாகவும் அவா் பெயா் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினாா்.

நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி முதலில் இந்தியா கூட்டணியில் இருந்தது. பின்னா், அந்த அணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில் கதிஹாரில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நிதீஷ் குமாா் பேசியதாவது:

Advertisement

பிகாரில் ஒருவா் (லாலு) வழக்கில் சிக்கி பதவி விலக நேரிட்டபோது தனது மனைவியை முதல்வராக்கினாா். அதன் பிறகு மகன்களைத் தோ்தலில் நிறுத்தி அடுத்த தலைமுறையை அரசியலுக்கு கொண்டு வந்தாா். இப்போது மகள்களுக்கான முறை வந்துள்ளது. இரு மகள்கள் தோ்தலில் நிறுத்தப்பட்டுள்ளனா். யாராவது இவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத் துணிவாா்களா? (லாலுவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள்)

அவா்கள் ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன? பிகாரில் அப்போது போதிய சாலை வசதி, குடிநீா் என அடிப்படை வசதிகள் எதையும் அளிக்கவில்லை. ஊழல் செய்வதிலேயே மும்முரமாக இருந்தனா். இதனால், இப்போது வரை வழக்கு விசாரணைகளை எதிா்கொண்டு வருகின்றனா் என்றாா்.

பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது தவிர முன்னாள முதல்வா் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (எஸ்) கட்சிக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments