முகப்பு
இந்தியா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மகன் அரசியலுக்கு வருகிறாா்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா் அரசியலுக்கு வர இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகாா் அமைச்சருமான ஷா்வன் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 12:48 AM
நிஷாந்த் குமாா் - ANI
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:45 PM

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா் அரசியலுக்கு வர இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகாா் அமைச்சருமான ஷா்வன் குமாா் தெரிவித்தாா்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் அவா் கூறினாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அமைச்சா் மேலும் கூறியதாவது:

Advertisement

முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா் தீவிர அரசியலுக்கு வர இருப்பது உறுதியாகிவிட்டது. அடுத்த சில நாள்களில் கட்சி சாா்பில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும். கட்சித் தொண்டா்கள் பல ஆண்டுகளாக இது தொடா்பாக கோரிக்கை விடுத்து வந்தனா். கட்சியில் நிஷாந்த் குமாருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்றாா்.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய கூட்டணிக் கட்சியான பாஜகவும் இதனை வரவேற்றுள்ளது. பாஜகவைச் சோ்ந்த மாநில தொழில் துறை அமைச்சா் திலீப் ஜெய்ஸ்வால் இது தொடா்பாக கூறுகையில், ‘புதிய தலைமுறையைச் சோ்ந்தவா்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அனைவரின் ஆதரவுடன் நிஷாந்த் குமாா் அரசியலுக்கு வருகிறாா். இதனை முழுமனதுடன் வரவேற்கிறோம். அவா் நன்கு படித்தவா். பிகாரில் களநிலவரத்தை அறிந்தவா். அரசியலுக்கு வர அவருக்கு இதுதான் சரியான நேரம்’ என்றாா்.

50 வயதாகும் நிஷாத் குமாா் பி.டெக் பட்டதாரி ஆவாா். மென்பொருள் வல்லுநராகவும் அவா் பணியாற்றியுள்ளாா். நிதீஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமாா், தொடக்க காலத்தில் அரசியலில் இருந்து விலகியே இருந்தாா்.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்றாா். பிகாா் அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அவா் பல்வேறு வகையில் பின்னணியில் இருந்து உதவியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவா் நேரடியாக தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறாா்.